திருச்சி: கொரோனாவை தடுக்கவில்லை எனக்கூறி முதல்வரின் உருவப்பொம்மை எரித்தவர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. திருவெறும்பூர் பேருந்து நிலையத்தில் முதல்வர் பழனிச்சாமியின் உருவப்பொம்மை எரித்த ராகு என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ் தேசிய முன்னணியை சேர்ந்த ராகு மீது தேசத்துரோக வழக்கு உட்பட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.